Tuesday, August 24, 2010

ஒரு கொடியில் மும்மலர் கஸ்தூரியின் கலக்கல்!

Kasthuri
ஒரு கொடியில் மும்மலராக இருக்கிறார் கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்ற மும்மலர்தான் அது. எப்பவுமே செகன்ட் இன்னிங்ஸ்சுக்கு இருக்கிற
மரியாதை கிட்டதட்ட ரெண்டாவது டிகாஷன் லெவலுக்குதான் இருக்கும். ஆனால் கஸ்து£ரி விஷயத்தில் அப்படியில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
அழகான வில்லியா? அசர வைக்கும் குத்தாட்டமா? அன்பான அக்காவா? கூப்பிடு கஸ்தூரியை என்று கொண்டாடுகிறார்களாம் இந்த மும்மொழியிலும். எங்கே ஆரம்பித்தது இந்த ரேஸ்? தெலுங்கில் ரவிதேஜாவுடன் டான் சீனு என்ற படத்தில் ஆரம்பித்தார் தனது ரெண்டாவது ஆட்டத்தை... இல்லையில்லை, ஓட்டத்தை! இப்போது ஆந்திர தேசத்திலேயே வீடு பார்க்கலாமா என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். நவ்தீப்புடன் ஒரு படம், ஜெகபதி பாபுவுடன் ஒரு படம், சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்துடன் ஒரு படம் என்று தெலுங்கில் பிஸி. வந்த படங்களை லிஸ்ட் போட்டால் பக்கம் போதாது என்பதால் நிற்க.
தமிழில் ஆர்யாவின் தம்பி நடிக்கும் காதல் டூ கல்யாணம் படத்தில் கலக்கலான அக்கா நம்ம கஸ்து£ரிதான். செல்வா இயக்கும் நாங்க படத்திலும் ஒரு முக்கியமான ரோல். இன்னும் கமிட் ஆகல. அதுக்குள்ளே எழுதிடாதீங்க என்று கஸ்தூரி சொன்ன இரு படங்களில் ஒன்று முருகதாசின் ஏழாம் அறிவு. (சொல்லியாச்) அந்த இன்னொரு படத்தையும் சொல்லாம விட்டா தப்பு. முத்துக்கு முத்தாக படத்தில் ஒரு கவர்ச்சியாட்டம் இருக்கிறதாம் கஸ்து£ரிக்கு.
நமக்கு சினிமாவை விட்டா வேறென்ன தெரியும்? அதான் அடுத்த ரவுண்டுல இறங்கிட்டேன். இன்னும் அப்படியே இருக்கியே என்று மற்றவர்கள் சொல்லும்போது மனசுக்குள்ளே ஒரு மணியடிக்கும் பாருங்க. அது அனுபவிச்சாதான் புரியும் என்கிற கஸ்து£ரியிடம் கேட்க கூடாத ஒரு கேள்வி கல்யாணம் எப்போங்கிறதுதான். இப்பதான் ஒரு நாள் ரெஸ்ட்ல சென்னைக்கு வந்திருக்கேன். சுடசுட பிரியாணி பண்றேன். குக்கர் சத்தம் போடுது. வைச்சுரட்டா என்றார்.

No comments:

Post a Comment