Wednesday, August 25, 2010

பகலவன் படம் டிராப் இல்லை தாணு-விஜய்-சீமான் உறுதி!

எழுத நேரமில்லாமல் பிசியாகவே இருப்பவர்களுக்கு சிறைக்கூடம் வசதிதான்! சிறைக்கு போன சீமான் அங்கே அமைதியாக செய்து முடித்த முக்கியமான
வேலை ஒன்று பகலவன் ஸ்கிரிப்டை பக்காவாக முடித்ததுதான். கடந்த பல மாதங்களாகவே ஒரு குழுவோடு இந்த கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார் சீமான். கதை முழுமையடையும்போதுதான் இந்த கைதும் சிறையும்!
உள்ளே போன சீமான் இந்த ஸ்கிரிப்டை முழுமையாக்கிவிட்டாராம் இப்போது. நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் தாணு இந்த படம் பற்றிய அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து சீமானிடம் பகிர்ந்து கொண்டாராம்.
நான் இந்த படத்தில் நடிக்கிற விஷயத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் ஆக வேண்டியதை பதற்றமில்லாமல் பாருங்கள் என்று தாணுவிடமும், சிறைக்குள்ளிருக்கும் சீமானிடமும் உறுதியாக கூறியிருக்கிறாராம் விஜய். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு பிறகு சீமான் இயக்கப் போகும் பகலவன்தான் விஜய் நடிக்க போகும் படம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment