Showing posts with label காவலன். Show all posts
Showing posts with label காவலன். Show all posts
Wednesday, November 17, 2010
Monday, November 1, 2010
வித்தியசமான கேரக்டரில் விஜய்!
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர்.
விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தை பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் "'வேலாயுதம்' படத்தில் இருவித கேரக்டரில் நடிக்கிறார் விஜய். விஜய் இருவித கேரக்டர்களையும் மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளேன்" என்றார்.
Friday, October 29, 2010
Wednesday, October 27, 2010
உள்ளூர்லேயே வச்சுக்கலாம் -விஜய்
மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள்
கோடம்பாக்கத்தினர். 'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ்சினிமா. 'ஒச்சாயி' படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். பணக்கார குழந்தை. பல்லு முளைக்காவிட்டாலும் பபுள்கம் தின்னும்!
கோடம்பாக்கத்தினர். 'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ்சினிமா. 'ஒச்சாயி' படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். பணக்கார குழந்தை. பல்லு முளைக்காவிட்டாலும் பபுள்கம் தின்னும்!
மீண்டும் தனது பட இசை வெளியீட்டு விழாவை லண்டனில் வைக்கப் போகிறார் சிம்பு. இவரே இப்படி என்றால் விஜய் படக்குழு சும்மாயிருக்குமா? காவலன் பட பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைக்கலாம் என்றாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். வழக்கம் போல ஃபைல் விஜய் டேபிளுக்கு போயிருக்கிறது.
அவரோ, "ஏன் மலேசியாவுல வைக்கணும், நம்ம ஊர்லயே வைக்கலாமே?" என்றாராம். "சிங்கப்பூர்லயாவது..." என்று ஆசைப்பட்ட ஷக்தி சிதம்பரத்திற்கு விஜய் சொன்ன பதில் 'நோ' என்பதுதான். என்ன காரணம் என்பதுதான் புரியவேயில்லை.
Monday, October 4, 2010
மேட்டுப்பாளையத்தில் “காவலன்” விஜயை காண முண்டியடித்த ரசிகர்கள்
நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் காவலன். இதில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். வடிவேல் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர் களைப்பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார். இன்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் சூட்டிங் நடக்கிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் நேற்று மேட்டுப்பாளையம் வந்தார். இன்று நடிகர் வடிவேலு வருகிறார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது. ரெயில் நிலையம், பிளாக் தண்டர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. காவலன் படத்தை சித்திக் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் விஜய் பிளாக் தண்டரில் உள்ள ரிசார்ட்சில் தங்குகிறார்.
Friday, September 24, 2010
விஐயின் பிராக்டிகல்
வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
நோ ரெஸ்ட். அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்பதிலும் அது பிடித்திருந்தால் சம்பளம் பேசி லாக்கரை நிரப்பிக் கொள்வதுமாக ரொம்பவே பிராக்டிகல்! இத இத இத இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.
விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
வேலாயுதத்தை தொடர்ந்து திரைக்கு வரப்போகிற விஜய் படம் இதுவேதான்!
விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
வேலாயுதத்தை தொடர்ந்து திரைக்கு வரப்போகிற விஜய் படம் இதுவேதான்!
Sunday, September 19, 2010
என் ஸ்டைலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் : விஜய்!
ஏகவீரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘காவலன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜய்,
அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், தயாரிப்பாளர் சி.ரோமேஷ்பாபு, இயக்குனர் சித்திக் கலந்து கொண்டனர். நிருபர்களிடம் விஜய் கூறியதாவது: இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்றும், ‘காவல் காதல்’ என்றும் யார், யாரோ பெயர் சூட்டியிருந்தனர். டைட்டிலுக்கு பிரச்னை என்றெல்லாம் சொன்னார்கள். அது தவறு. ‘காவலன்’ என்பதே பொருத்தமான டைட்டில். அதையே வைத்துள்ளோம். ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிறகு அசினுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். திடீரென்று பாலிவுட்டுக்கு சென்ற அவரை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.
சித்திக் டைரக்ஷனில் நானும், வடிவேலுவும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் நடித்தோம். இப்போது இந்த படத்தில் நடிக்கிறோம். டயலாக் காமெடி, ஆக்ஷன் காமெடி என, ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு நிகராக இப்படம் இருக்கும். காமெடி கலந்த காதல் கதை என்றாலும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சித்திக்கிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை இது. தமிழில் உருவாக்க திட்டமிட்டோம். ஆனால், மலையாளத்தில் ‘பாடிகார்ட்’ பெயரில் உருவாக்கினார். அதை தமிழில் ரீமேக் செய்கிறோம். எனது வழக்கமான பார்முலாவில் இருந்து மாறுபட்ட படம். ‘காவலன்’, ‘வேலாயுதம்’ படங்களுக்கு பிறகு சீமான் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளேன்.
Saturday, September 18, 2010
அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! – விஜய்
அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய்.
கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம்,
‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.
‘காவலன்’ படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பாடிகார்ட்’ படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் ‘காவலன்’ படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
விஜய் கூறுகையில், “இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். என் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இருக்கும்.
காவல்காரன் கிடைக்கல…
இந்த படத்துக்கு, ‘டைட்டில்’ பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில், ‘காவல்காரன்’ என்று பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வேறு சில பெயர்களுக்குப் பிறகு கடைசியாக, காவலன் என்ற பெயர் அமைந்து இருக்கிறது.
சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, வடிவேல் தலையில் சுத்தியல் விழுகிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.
அசினுடன்…
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் எனண நம்புகிறேன்.
படப்பிடிப்பின் இடையில் அசின் இந்தி படத்துக்கு போய்விட்டார். 2 மாதங்களை வீணாக்க வேண்டாமே என்றுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன்…,” என்றார்.
அசின் பேசுகையில், “தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும்.
மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ‘காவலன்,’ மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.”
நடிகர் வடிவேல், டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் நன்றி கூறினார்.
காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்
“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:-
இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம்
சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.
இந்த படத்துக்கு டைட்டில் பெரிய பிரச்சினையாக இருந்தது. காவல்காரன் என்ற பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. இடையில் காவல் காதல் என்ற பெயரை யாரோ பரப்பிவிட்டனர். கடைசியில் காவலன் என்ற பெயர் அமைந்துள்ளது.
சித்திக்குடன் ஏற்கனவே பிரண்ட்ஸ் படத்தில் சேர்ந்தேன். அதில் வரும் காமெடியை இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக வடிவேலு தலையில் சுத்தியல் விழும் சீனை இப்ப பார்த்தாலும் சிரிப்பேன்.
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி படங்களில் சேர்ந்து நடித்தோம். இது எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரு படங்களை போலவே இதுவும் வெற்றி பெரும்.
படப்பிடிப்பு இடையில் அசின் இந்தி படத்துக்காக போய்விட்டார். இரு மாதங்களை வீணாக்க வேண்டாம் என கருதி ”வேலாயுதம் படத்திலும் நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசின் பேசியதாவது:-
தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். “காவலன்” படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் என் பாணியில் நடிப்பேன். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி இந்த படம் எங்கள் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். வடிவேல், இயக்குனர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்று பேசினர்.
Wednesday, September 15, 2010
ஐரோப்பாவில் காவலன் 'விஜய்'
ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் சி.ரோமேஷ்பாபு தயாரிக்கும் படம், ‘காவலன்’. விஜய், அசின் ஜோடி. முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா, லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. கதை, திரைக்கதை எழுதி சித்திக் இயக்குகிறார். வேலூர் வி.ஐ.டி கல்லூரியில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு காரைக்குடி, கும்பகோணம், மலேசியா, பாங்காக் பகுதிகளில் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
Subscribe to:
Posts (Atom)

























