Tuesday, October 5, 2010

நிர்வாண காட்சியில் நடிக்க மறுப்பு


தமிழ், ஆங்கிலம் உட்பட 5 மொழிகளில் வெளியாகும் படம் ‘ஸ்…ஸ்…ஸ்’. பாம்பு சீறும் சத்தம்தான்
தலைப்பு. இதில் நாக கன்னியாக நடித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். இர்பான் கான் ஹீரோ. முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹாலிவுட்டில் நடந்துள்ளது. பாம்பு தோல் உரிக்கும் காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது. ஒரு காட்சியில் மல்லிகாவை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ஜெனிபர் சேம்பர் கேட்க, அதற்கு மறுத்துவிட்டாராம் மல்லிகா. இதே படத்தின் வஞிளம்பரத்துக்காக ட்விட்டரில் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் மல்லிகா. இது பற்றி அவர் கூறும்போது, ‘‘போட்டோவுக்கு போஸ் தருவது வேறு. படத்தில் நடிப்பது என்பது வேறு. அதனால் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மறுத்தேன்’’ என்றார்

No comments:

Post a Comment